search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது மாப்பிள்ளை தற்கொலை"

    புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கவிராஜன் (வயது 29). பி.காம் மற்றும் மல்டி மீடியா அனிமேசன் படித்துள்ள இவர், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    இவருக்கும், தேவதானத்தைச் சேர்ந்த முனீசுவரி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெற்றோர் கட்டாயத்தின் பேரிலேயே கவிராஜன் திருமணம் செய்தாராம். இதனை மனைவியிடம் அடிக்கடி கூறிவந்தார்.

    இந்த நிலையில் இரவில் வேலை இருப்பதால், வீட்டிற்கு காலையில் வருகிறேன் என கவிராஜன் மனைவியிடம் கூறிச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஸ்டூடியோவுக்கு சென்றனர்.

    அங்கு கதவு பாதியளவு திறந்து கிடந்தது. அதனை திறந்து உள்ளே சென்ற போது கவிராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவிராஜன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி முனீசுவரி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

    காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில் பாளையம் சோழ நகரை சேர்ந்தவர் குமார்ராஜா (வயது 33).

    இவர் பெருந்துறை சிப் காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஷோபனா (21). இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது.

    குமார்ராஜாவுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை காதல் மனைவி ஷோபனா கண்டித்தார். இது தொடர்பாக இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் ஷோபனா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார். இதனால் குமார் ராஜா மிக வேதனையில் இருந்தார் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அவரது அம்மா வெளியே போய் விட்டார். இதனால் அவர் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வீட்டில் உள்ள மின் விசிறி கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×